எங்கள் கிராமத்தின் குடிதண்ணீர், ஆழ் குழாய் கிணறுகளை நம்பி இருக்கின்றது. ஆழ் குழாய் மொடோர்களை இயக்க மின்சாரம் தேவை.
தமிழ்நாடு மின்சார வாரியம் பெரும்பாலான சமயங்களில் மக்களுக்கு குடிதண்ணீர் தேவைப்படும் போது மின்சாரம் வழங்க படுவதில்லை. சில காரணங்கள் இயற்கையின் சீற்றமும் கூட.
இதனை சரி செய்ய மின் உற்பத்தி இயந்திரம் (Electric Generator) கிராமத்திற்கு தேவை.
இவைகளை நன்கொடை கொண்டு நடைமுறை படுத்தும் தொண்டூழியர் யாரேனும் ஊரில் இருந்தால் காசாங்காடு இணையதள குழுவை தொடர்பு கொள்ளவும். பொது மக்களின் நன்கொடை கொண்டு செலவு செய்து கணக்கு முறையாக பொது மக்களிடம் கொடுக்கும் அனுபவம் அவசியம்.
மேலும் தகவல்களுக்கு காசாங்காடு கிராமத்தின் இணையதள குழுவை அல்லது கிராமத்திற்கு சென்று நேரடியாக பார்வை இடவும்.